×

பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை

புவனகிரி, மே 7: பரங்கிப்பேட்டை அருகே இடப்பிரச்னையில் முதியவரை அடித்து கொன்ற தம்பி மகனை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள அருண்மொழித்தேவன் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மேலகுப்பம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(65). இவருக்கும், இறந்துபோன இவரது தம்பி குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் குடும்பத்திற்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாரிமுத்துவின் தம்பி மகனான ஆனந்தராஜ் (27) என்பவர் தகராறில் மண்வெட்டி காம்பை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆயிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். பின்னர் பெரியப்பாவை அடித்து கொலை செய்த ஆனந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Barangipet ,Bhubaneswar ,Parangippet ,Melakuppam ,Arunmozhithevan Panchayat ,Barangippet ,Marimuthu ,Parangipettai ,
× RELATED பெரியப்பாவை கொன்றது ஏன்?